அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்தவின் நெருங்கிய உறவினர்! வெளியானது புகைப்படம்


புதிய இணைப்பு

முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன. 

நாட்டின் தற்போதை நெருக்கடியான நிலையில் பல முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதும் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில் பிரமர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான நிரூபமா ராஜபக்ச நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வெளியாகியுள்ளன. 

முதலாம் இணைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிரூபமாக ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நேற்று இரவு 10.25 மணியளவில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-655 விமானத்தில் பயணித்துள்ளார் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார் என இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பெயர்கள் உள்ளடங்கிய பண்டோரா ஆவணத்தில் நிரூபமாக ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.