இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? – மும்பையில் புதிய வகை கொரோனா!

கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்ததையடுத்து, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே நிலைமைக்கேற்ப முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படுவதாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அண்மையில் அறிவித்திருந்தன.

அத்துடன் கொரோனா கடுப்பூசி போட்டுக் கொள்வது இனி கட்டாயம் இல்லை என்றும், பொதுமக்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், நாட்டு மக்கள் அதிர்ச்சியடையும்படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில்
புதிய வகை கொரோனா
தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அதிர்ச்ச தகவலால் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஒரு நபருக்கு ஓமைக்ரான் வைரசின் திரிபான XE எனும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 200 நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ள முதல் நபர் இவர்தான் என்று அறிவித்துள்ள
மும்பை மாநகராட்சி
, தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.