சிங்கப்பூர் அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூர் சென்றுள்ள நம் ராணுவ தலைமை தளபதி நரவானே அந்நாட்டு ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நம் ராணுவ தலைமை தளபதி நரவானே ஏப்.,4ல் சென்றார். நேற்று முன்தினம் சிங்கப்பூர் ராணுவ அமைச்சர் இங் எங் ஹென்னை சந்தித்துப் பேசினார். அதில் இந்தியா – சிங்கப்பூர் இடையிலான ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின் சிங்கப்பூர் ராணுவ தலைமை தளபதி பிரிகேடியர் ஜெனரல் டேவிட் நியோவை நரவானே சந்தித்தார். அதில் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.நேற்று இங்குள்ள கோ கெங் ஸ்வீ ராணுவ கல்லுாரிக்கும் சாங்கி கடற்படை தளத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
கடற்படை தளத்தின் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து நரவானே கேட்டறிந்தார். அங்கு கடல்சார் பாதுகாப்பை வலுபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நரவானேவுக்கு அங்குள்ள அதிகாரிகள் விளக்கினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.