சொத்து வரி உயர்வு: முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,” சொத்து வரி உயர்வை விருப்பத்துடன் செய்யவில்லை. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை.

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க “என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், அதிமுக எம்எல்ஏக்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜனதா உள்ளது: 42-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.