காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்த உமர்தசி, அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சமீதி முஸ்தபர் என்றும் தெரிய வந்தது. இருவரும், சோன்மோஹ் பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.