சேலத்தில் ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாக புல்லட்டுடன் மாயமான இளம் காதல் ஜோடி கைது.!

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி புல்லட் உடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் கோலாரில் கைது செய்தனர்.

சேலம் மாநகர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள இருசக்கர வாகன கன்சல்டிங் விற்பனையகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இளம் காதல் ஜோடி ஒன்று சென்றது. பின்னர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை தேர்வு செய்த அந்த ஜோடி வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வருவதாக கூறி எடுத்துச் சென்றது.

ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த இளஞ்ஜோடி கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கோலாரில் தலைமறைவாக இருந்த காதல் ஜோடியை கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் பிரவீன்-ப்ரீத்தி என்பது தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.