பெரு தலைநகர் லிமாவில் பெட்ரோல், டீசல்,உரம் விலையை குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்| Dinamalar

லிமா:பெட்ரோல், டீசல் மற்றும் உரம் ஆகியவற்றின் விலையை குறைக்கக் கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பெரு நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடான பெருவில் பெட்ரோல், டீசல், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தலைநகர் லிமாவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இதனால் அங்கு நேற்று அதிகாலை 2:00 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் நடத்திய பொதுமக்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது போராட்டம் நாடு முழுதும் பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.