ரன்பீர் – அலியா ஏப்ரல் 17ல் திருமணம்

மும்பை: ரன்பீர் கபூர், அலியா பட் திருமணம் வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் ராஜ்கபூரின் பேரனும் மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார். இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் நடிகை அலியா பட். ரன்பீர் கபூரும் அலியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த ஆண்டில் இவர்களின் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. இந்நிலையில் அலியாவின் பாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது விருப்பத்தின்படி, ரன்பீர், அலியாவுக்கு விரைவில் திருமணத்தை நடத்த குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி வரும் 17ம் தேதி மும்பையிலே எளிமையாக திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.