ஹெலிகாப்டரில் “ஹேப்பியாக” பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புனே: மஹாராஷ்டிராவில் பல தலைமுறைகளாக தங்கள் குடும்பத்தாருக்கு பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தில், தனக்கு பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில், பாசக்கார தந்தை ஒருவர், ஹெலிகாப்டரில் அக்குழந்தையை அழைத்து வந்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்த வக்கீல் விஷால் ஜரேகர். இவரது குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தையே இல்லை என்ற ஏக்கம் குடும்பத்தினருக்கு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், விஷாலின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், பெருமகிழ்ச்சியடைந்த விஷால் குடும்பத்தார், அந்த குழந்தையை பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு தன் சொந்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

latest tamil news

பிறந்தது முதல் போசாரி பகுதியில் உள்ள விஷால் ஜரேகர் மனைவியின் தாய் வீட்டில் இருந்துவந்த குழந்தையை தன் சொந்த வீடு உள்ள ஷெல்காவோன் பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளார் குழந்தையின் தந்தை விஷால். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அழைத்து வந்துள்ளார். இது குறித்து தந்தை விஷால் கூறுகையில், ‛எங்கள் மொத்த குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. எனவே, எங்கள் மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம். அதன்படி, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம்’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.