185 கோடியை தாண்டியது தடுப்பூசி

புதுடெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,086 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,871 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 பேர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,30,30,925 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,48 7ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,198 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,24,97,567 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 185 கோடிக்கும் (1,85,02,12,645) அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 13,52,233 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 1.97 கோடிக்கும் அதிகமான (1,97,65,419) தடுப்பூசிகள் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு 2.37 கோடிக்கும் மேலான (2,37,62,364) முன்னெச்சரிக்கை டோஸ்கள் போடப்பட்டுள்ளன’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.