கைதிகளுக்கு பைபிள் எஸ்.பி.,யிடம் புகார்| Dinamalar

கதக், : கதக் மாவட்ட சிறைச்சாலையில், கைதிகளுக்கு கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் வழங்கி, பிரார்த்தனைக்கு அனுமதியளித்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி.,யிடம் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.மாவட்ட சிறையில் உள்ள ஒருவரை சந்திக்க சென்ற ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்,

அங்கு கைதிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பைபிள் குறித்து கேட்டறிந்தார். பைபிளையும் புகைப்பட ஆதாரமாக சேகரித்து கொண்டார்.இது தொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.அதில், ‘ஏழு பேர் கொண்ட கிறிஸ்தவ குழுவினர், மார்ச் 12ல், மாவட்ட சிறைக்கு சென்றுள்ளனர். அங்கு கைதிகளுக்கு பிரார்த்தனை என்ற பெயரில், மனதை மாற்றி, மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர்.’எனவே, கதக் மாவட்ட சிறைச்சாலை மற்றும் மாநிலத்தில் உள்ள பிற சிறை வளாகங்களுக்குள் கிறிஸ்தவ மிஷனரிகளை அனுமதிக்கக் கூடாது’ என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.