சிம்பு படத்தினால் சினிமாவை விட்டு விலகினேன்..பகிர் கிளப்பிய பிரபல நடிகை..!

நடிகர்
சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு வருகின்றார். இடையில் பல சர்ச்சைகள் மற்றும் சறுக்கல்களை சந்தித்தாலும் தற்போது புது உத்வேகத்துடன் செயல்ப்பட்டு வருகின்றார்.

மாநாடு
படத்தின் வெற்றி அவரை மீண்டும் முன்னணி நடிகர்களின் வரிசையில் அமரச்செய்துள்ளது. அதன் பின் டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

ரஜினியை மிஞ்சிய விஜய்…இதெல்லாம் பெரிய விஷயம்ப்பா..!

இது தவிர பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகின்றார். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் சிம்பு படத்தினால் சினிமாவை விட்டு விலகியதாக பேசியுள்ளார். .தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ள லேக்கா வாஷிங்டன் வினய் நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

சிலம்பரசன்

இந்நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான
கெட்டவன்
படத்தில் லேக்கா வாஷிங்டன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அப்படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. எனவே அந்த படத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களினாலே தான் சினிமாவை விட்டு விலகியதாக லேக்கா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.

லேக்கா வாஷிங்டன்

இந்த தகவல் தற்போது பேசும்பொருளாக மாறியள்ளது. தற்போது லேக்கா வாஷிங்டன் திருமணம் செய்துகொண்டு மும்பையில் சிற்பக்கலை கலைஞராக பணிபுரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.