பாக்யாவிடம் உண்மையை சொன்ன கோபி… அடுத்து என்ன நடக்க போகுதோ…

Tamil Serial Baakiyalakshmi Update : என்ன பாக்யா அம்மா ஏன் இப்படி இருக்கீங்க… கோபி ராதிகா விஷயம் உங்களுக்கு தெரிஞ்சாலும் நீங்க இப்படிதான் நடந்துக்குவீங்க போலயே என்று கேட்கும் அளவுககு பாக்யலட்சுமி சீரியல் சற்று வெறுப்பை கொடுக்கிறது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முன்பு எப்படி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோ அதைவிட தற்போது ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தனது முன்னாள் காதலியுடன் திருமணம் வரைக்கும தயாராகியுள்ள கோபியை பாக்ய இப்படி தாங்கு தாங்குனு தாங்குராங்களே ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் விஷயம் தெரிந்தாலும், இப்படித்தான் கணவருக்கு சப்போர்ட்டாக இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

திருமணத்திற்கு மீறிய உறவிற்கு முக்கியத்தும் கொடுக்கும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி. குடும்பத்தில் கோபியின் அப்பாவுக்கு எப்போது பக்கவாதம் வந்ததோ அப்போவே சீரியலுக்கும் பக்காவாதம் வந்துவிட்டது போல. அன்றிலிருந்து கோபி வீட்டில் தங்குவதில்லை அடிக்கடி வெளியில் சென்றுவிடுகிறார். இரவில் வீட்டிற்கு வருவதில்லை என அடுக்கடுக்கான பல முயற்சிகளில் இறங்கியுள்ள கோபிக்கு பாக்யாவிடம் இருந்து கிரீன் சிக்னல்தான்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் இரவில் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் குடும்பத்துடன் பிக்னிக் போகும்போது நீங்கள் ஏதாவது வேலை சொல்லிவிட்டு வெளியில் செல்லுங்கள் உங்கள யாரும் கேட்க மாட்டார்கள்.. யாராவது உங்களை கேட்டாலும் அவர்களிடம் நான்பேச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் பாக்யா. இனிமேல் என்ன கோபியின் முயற்சிக்கு தடை போட யாரும் இல்லை.  

குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் கணவர் எங்கு செல்கிறார் என்ன செய்கிறார் ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று யோசிக்காமல் இருக்க முடியுமா? அப்படி நீங்கள் ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்கும்போதே அவர் கோபப்படுகிறார் என்றால் ஏதொ சொல்லக்கூடாது ஒரு வேலையை செய்துவிட்டு வருகிறார் என்ற சந்தேகம் வராதா? ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதிக்கும் இந்த காலத்தில் ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை இப்படியா சித்தரிப்பது?

வீட்டில் சமையலும் வெளியில் சமையல் ஆர்டரும் ஒரு பெண்ணுக்கு உண்மையான மனநிம்மதியை கொடுத்துவிடும் கணவர் எங்கு சென்றாலும், எந்த பாதிப்பு இல்லை என்பதை பாக்யலட்சுமி உணர்த்துகிறதா என்று யோசிக்க வைக்கிறது இந்த சீரியல். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், பெரிய மகனுக்கு வீட்டின் மீது அக்கரையே இல்லை. சின்னமகன் வீடே கதி என்று கிடக்கிறார்.

தாத்தாவுக்கு பக்கவாதம் அவரால் பேச முடியவில்லை. ஆனால் இந்த விஷயம் எழிலுக்கு தெரிந்துவிட்டது இப்போதாவது உண்மையை சொல்லிவிடலாமே ஏன் தயக்கம். சொல்லிவிட்டால் அடுத்து கதை எப்படி செல்லும் என்பதை இயக்குநர் மறந்துவிட்டாரா? இதில் கோபி மாட்டமாட்டார் என்று மக்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். ஆனாலும் அவர் மாட்டுவது போன்ற ப்ரமோ…

டைரக்டர் சார் நீங்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறீங்கள்.. மக்களை ஏமாற்றுவதாக நினைத்து நீங்களே உங்களை ஏமாற்றிக்கொள்கிறீகள். சீக்கிரமா ஏதாவது சீரியலை விறுவிறுப்பா கொண்டுபோங்க….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.