கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது- ராணி இரண்டாம் எலிசபெத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: ‘கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது’ என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

latest tamil news

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (95) கடந்த பிப்ரவரி மாதம் கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததும் தனது பணிக்கு திரும்ப தொடங்கினார்.
பிரிட்டனின் என்ஹெச்எஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு வீடியோ கால் வாயிலாக நன்றி தெரிவித்த அவர் தான் சிகிச்சை பெற்ற இந்த மருத்துவமனையில் ராணி எலிசபெத் வார்டை திறந்து வைத்தார்.

latest tamil news

மேலும் தனக்கு ஊழியர்களால் சிகிச்சை நன்றாக அளிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பாக கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். ‘கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது’ எனத் தெரிவித்துள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் இந்த மாதம் தனது 96வது பிறந்தநாள் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.