வேறொரு பெண்ணுடன் தொடர்பு… வீட்டிலிருந்த நகை, பணத்தையும் திருடிச் சென்ற கணவர்… ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள கணவர் தனது வீட்டில் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறி பெண் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தீக்குளிக்க முயன்றார்.

பள்ளப்பட்டியைச் சேர்ந்த காந்திமதி என்ற அந்தப் பெண், மாநகர ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிலம்பரசன், 10 ஆண்டுகளுக்கு முன் வேறொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தனியே வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

2 மாதங்களுக்கு முன் தாம் திருந்திவிட்டதாகக் கூறி மீண்டும் தன்னிடம் வந்தவர் வீட்டில் இருந்த 5 சவரன் நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டதாகக் காந்திமதி கூறினார். கணவர் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டுத் தருமாறு கோரி தீக்குளிக்க முயன்றவரை தடுத்த போலீசார், சிலம்பரசனை அழைத்து விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.