தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் மனித உரிமை கமிஷன் உத்தரவு

புதுடெல்லி: தமிழக மீனர்வர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், அவர்களது படகுகளை சேதப்படுத்தி சிறை பிடிப்பதையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடல்சார் மக்கள் நல சங்கத்தின் தரப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதோடு மட்டுமில்லாமல், ஆதாரமின்றி கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் இதுகுறித்து ஆணையம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட புகார் மனுவை பரிசீலனை செய்த ஆணையம், தமிழக மீனவர்கள் இடங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நவடிக்கை குறித்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றியம் மற்றும் தமிழக அரசு ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.