பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில்,  உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். முன்னேறி செல்ல அதுவோ ஒரே வழி. பிரதமராக யார் வர வேண்டும் என்பதை நேர்மையான தேர்தல் மூலம் மக்கள் முடிவு செய்யப்பட்டும்’ என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.