பாரம்பரிய முறையிலான போரிடும் எந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டும் – விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி

நாட்டின் பாரம்பரிய முறையிலான போரிடும் எந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டுமென என வலியுறுத்திய விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி, புதிய போர்க்களச்சூழல் உருவாகி உள்ளதால் மறு சீரமைப்பு அவசியமென கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எதிர்க்கால போர் சூழலில் யார் எதிரி என்பதை அறியாத நிலை உருவாகும் என்றும் கம்ப்யூட்டர் வைரஸ்கள் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.

உலகம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் சூழலில், இணையவழி தாக்குதல் மூலம் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் முடக்கப்படலாம் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.