மற்றொரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்தியதால் மனைவி ஆத்திரம் ; உறவினர்களுடன் சென்று கணவர் மீது தாக்குதல்

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரில், தன்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில், வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக கூறி ஆத்திரத்தில் உழன்ற பெண், உறவினர்களுடன் சென்று, கணவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மருத்துவர் பானு பிரகாஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்லாமல் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அவரது மனைவி கணவருடன் வாழ விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவர் பானு பிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் குடும்பம் நடத்துவதை அறிந்த அவரது மனைவி, ஆற்றாமையின் உச்சத்தில், தனது உறவினர்களுடன் அங்கு சென்று இருவரையும் தாக்கினார்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.