லண்டன் பல்கலை ஆய்வு அறிக்கை| Dinamalar

புதுடில்லி-அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் பல்கலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த, 46 நகரங்களின் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.கடந்த, 2005 முதல் 2018 வரை, ‘நாசா’ மற்றும் ஐரோப்பிய செயற்கைக் கோள்கள் திரட்டிய தகவல்கள் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: ஆய்வில், சென்னை, மும்பை, பெங்களுரு உள்ளிட்ட எட்டு இந்திய நகரங்களில், காற்று மாசுபாட்டால், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இயற்கை மரணத்திற்கு மாறாக, முன்னதாகவே உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.