நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில் கோர விபத்து.. மருத்துவ மாணவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சில அடி தூரத்திற்கு கார் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மருத்துவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சியை சேர்ந்த மாணவர் அஜித் மிதிலேஷ் தன் தோழியுடன் அரியமான் பீச்சில் இருந்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி நோக்கி சென்றுள்ளார். சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க அஜித மிதிலேஷ் காரை திருப்ப முயன்றதில்  கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.  சம்பவ இடத்திலேயே மதிலேஷ் உயிரிழந்தார். 

மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.