நியூயார்க்கில் சீக்கியர்கள் இருவர் மீது மீண்டும் தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்-அமெரிக்காவின் நியூயார்க்கில், மீண்டும் இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

latest tamil news

அமெரிக்காவில், சீக்கிய சமூகத்தினருக்கு எதிராக, தொடர்ந்துகுற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இங்கு, நியூயார்க்கின் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில், 3ம் தேதி, நிர்மல் சிங் என்ற சீக்கிய முதியவரை, சில மர்ம நபர்கள் கடுமையாக தாக்கினர்.இதில், அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்திற்கு, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

latest tamil news

இந்நிலையில், அதே பகுதியில், சீக்கிய சமூகத்தினர் மீது, மீண்டும் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில், நேற்று முன்தினம், சாலையில் சென்ற இரண்டு சீக்கியர்களை, சில நபர்கள் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய ஒருவரை கைது செய்தனர்.இந்த சம்பவத்திற்கு, நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகம் கண்டனம் தெரிவித்துஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.