இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த புதுச்சேரி மாணவன்.. முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பாராட்டு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, சிற்பமாக உருவாக்கிய புதுச்சேரி மாணவனுக்கு, அம்மாநில முதல்வர் ரங்கசாமி கோப்பை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

புதுச்சேரி பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் முத்தமிழ் செல்வன் என்னும் அந்த மாணவன், தமிழணங்கு ஓவியத்தை மூங்கில் உள்ளிட்ட இயற்கை பொருட்களைக் கொண்டு சிற்பமாக வடிவமைத்தார்.

அந்த மாணவனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், துணைநிலை ஆளுநர் தமிழிசையும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.