இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விலைவாசி உயர்வு

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாமல் மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகினர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணை வாங்க பிளாஸ்டிக் கேன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளன. விலை உயர்வு காரணங்களால் இனிப்பகம் மற்றும் துணிக் கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.