சாட்சியங்களை கலைத்ததாக புகார்- நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்:
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சாட்சிகளை கலைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்த விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நடிகை காவ்யா மாதவன், தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுகொண்டார். காவ்யா மாதவன் வீட்டில் அவரது கணவர் நடிகர் திலீப்பும் இருப்பார் என்பதால், அங்கு வைத்து விசாரணை நடத்துவது சரியாக வராது என போலீசார் கருதினர். இதையடுத்து அவரிடம் நடத்த இருந்த விசாரணையை போலீசார் ஒத்திவைத்துள்ளனர். தகுதியான இடத்தை கண்டறிந்த பின்னரே விசாரணை நடக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.