ரூ. 4,100 கோடிக்கு டுவிட்டரை விலைக்கு வாங்க எலன் மஸ்க் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். பின்னர் அதன் இயக்குனர் குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார்.

கடந்த 9ம் தேதி, எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைவதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் அதில் இணைய விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

latest tamil news

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4,100 கோடி ரூபாய்க்கு (43 பில்லியன் டாலர் ) வாங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.டுவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கினால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை உயரும். டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.