வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாலி தீவு துாதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்னா சச்தேவா கோர்ஹோனன் என்பவரை நியமித்துள்ளார்.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர், ரச்னா சச்தேவா கோர்ஹோனன். இவரை, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி தீவின் துாதராக, ஜோ பைடன் நியமித்துள்ளார். ரச்னா சச்தேவா தற்போது அமெரிக்க வெளியுறவு துறையில் துணை உதவி அமைச்சராக உள்ளார்.
இவர், சவுதி அரேபியாவில் அமெரிக்க துணை துாதராகவும், மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் துாதரகத்திலும் பணி புரிந்துள்ளார். இவர் அமெரிக்க அரசுத் துறையில் சேருவதற்கு முன் ஏ.டி அண்டு டி, ஐ.பி.எம்., போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிஉள்ளார்.ஜோ பைடன் ஒரே மாதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவரை துாதர்களாக நியமித்துள்ளார். சமீபத்தில், புனித் தல்வார், ஷெபாலி ரஸ்தான் துகால் ஆகியோர் மொராக்கோ, நெதர்லாந்து நாடுகளுக்கான அமெரிக்க துாதர்களாக நியமிக்கப்பட்டனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாலி தீவு துாதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்னா சச்தேவா கோர்ஹோனன் என்பவரை நியமித்துள்ளார்.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.