கொரோனா அச்சுறுத்தலால் நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புனேவில் நாளை நடக்கவிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உடல்தகுதி நிபுணர் பேட்ரிக் பர்ஹர்ட், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், மருத்துவர் அபிஜித் சால்வி உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மற்ற வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நடைபெறும் இடம் மும்பையின் பிரேபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.