காதல் கணவரான தனுஷை வைத்து 3 படம் இயக்கினார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. வை ராஜா வை படத்திற்கு பிறகு அவர் கேமராவுக்கு பின்னால் செல்லவே இல்லை. இந்நிலையில் தனுஷை பிரிந்த பிறகு பயணி என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கினார்.
அதன் பிறகு ஓ சாத்தி சல் எனும் இந்தி படத்தை இயக்க தயாராகி வருகிறார். 7 ஆண்டுகளாக ஏன் வீட்டிலேயே முடங்கிவிட்டீர்கள் என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது,
என் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரம் செலவிட விரும்பினேன். அதனால் தான் படங்களை இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டேன். தற்போது மீண்டும் வேலைக்கு திரும்பியிருப்பது சந்தோஷமாக உள்ளது.
என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் என்னிடம் நிறைய நேரம் இருக்கிறது என்றார்.
அடடா, பிள்ளைகள் வளரட்டும் என்று தன் கெரியரை தியாகம் செய்தாரா, இதுவல்லவா தியாகம் என்று ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹேன்ட்சம் ஹீரோ, சேட்டைக்கார ஹீரோவை இயக்க விரும்பும் ஐஸ்வர்யா
மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிரபல பாலிவுட் நடிகர்களான ரித்திக் ரோஷன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருடன் வேலை செய்யும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.