குட் நியூஸ் சொன்ன தனுஷ் …குஷியில் ரசிகர்கள்..!

தனுஷ்
நடிப்பில் கடைசியாக திரையில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் கடந்தாண்டு திரையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பின் தனுஷ் நடித்த மூன்று படங்கள் OTT யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற தவறியது.

ஜகமே தந்திரம்,
அத்ராங்கி ரே
, மாறன் ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி தோல்விகளை சந்தித்தன. இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது
வாத்தி
,
நானே வருவேன்
,
திருச்சிற்றம்பலம்
ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

ரசிகர்கள் தனுஷிடம் இனி படங்களை திரையில் வெளியிடுங்கள் என் சமுகப்பக்கங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தனுஷ் காதுக்கு செல்ல இனி தன் படங்களை திரையில் மட்டுமே வெளியிடுவேன் என தனுஷ் முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

நெல்சன் மீது ஏன் இவ்ளோ வெறுப்பு ? ரசிகர்கள் கேள்வி..!

இந்நிலையில் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அனிருத்
இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனுஷ்

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷ் ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படம் ஜூலை மாதம் திரையில் வெளியாகவிருப்பதாக பேசப்பட்டுவருகின்றது.

தனுஷ்

மேலும் கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் படம் பல நாட்கள் கழித்து திரையில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடைகிறதா நெல்சன் – ரஜினி கூட்டணி! விரிவான அலசல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.