செமிகான் இந்தியா மாநாடு பிரதமர் துவக்கி வைக்கிறார்| Dinamalar

புதுடில்லி-கர்நாடகாவில், மூன்று நாட்கள் நடக்க இருக்கும், ‘செமிகான் இந்தியா – 2022’ மாநாட்டை, 29ம் தேதி, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

மின்னணு உற்பத்தி, ‘செமிகண்டக்டர்’ எனப்படும், ‘சிப்’களின் வடிவமைப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ‘செமிகான் இந்தியா’ என்ற மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில், ‘செமிகான் இந்தியா’வின் முதல் மாநாடு, 29ம் தேதி துவங்குகிறது.மூன்று நாட்கள் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடிதுவக்கி வைக்க உள்ளார்.இந்த மாநாட்டை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நடத்துகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.