நரம்பின் ரத்தநாளம் வெடித்ததால் பாலிவுட் காமெடி நடிகர் மருத்துவமனையில் அட்மிட்

மும்பை: ரத்த நாளம் வெடிப்பு காரணமாக பாலிவுட் காமெடி நடிகர் ரஜத் ரவைல், பாந்த்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ரஜத் ரவைல், பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் உள்ள நரம்பில் ரத்தப்போக்கு திடீரென நின்றுவிட்டது. அதனால் ஏற்பட்ட ரத்த நாளத்தின் வெடிப்பால் அவருக்கு அதிகளவு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர் சிகிச்சைகாரணமாக அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஓய்வு எடுத்து வரும் ரஜத் ரவைல், மருத்துவமனையில் இருந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அவர் கடைசியாக வருண் தவான் மற்றும் சாரா அலிகான் நடித்த கூலி நம்பர் 1 இந்தி படத்தில் நடித்தார். சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் கானின் பாடிகார்ட், கலி கலி ஷோர் ஹே, போலீஸ்கிரி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.