சூர்யா – ஜோதிகா காதலைப்பற்றி மனம்திறந்த நடிகர்..! இதெல்லாம் நடந்திருக்கா ?

தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் இருக்கையில்
சூர்யா
மற்றும்
ஜோதிகா
அனைவர்க்கும் பிடித்தமான ஜோடியாக வலம் வருகின்றனர். பல படங்களில் சேர்ந்து நடித்துவந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலிக்க ஆரம்பித்த இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவருக்கும் தேவ் மற்றும் தியா என இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். திருமணம் ஆன பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் பல படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

ஜில்லுனு ஒரு காதல்
படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கிறார்கள்.

விஜய்யை இயக்க நான் தயார்..பிரபல இயக்குனர் பேச்சு..!

இப்படத்தை இயக்குனர்
பாலா
இயக்கிவருகிறார். இந்நிலையில் இவர்கள் காதல் பற்றி இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா கூறியிருக்கின்றார். பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ரமேஷ் கண்ணா தெனாலி படத்தில் ஜோதிகாவுடனும் நடித்திருந்தார்.

இப்படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு நடித்துவந்தார் ரமேஷ் கண்ணா. அப்போது பிரண்ட்ஸ் படத்தில் நடித்துமுடித்தவுடன் தெனாலி படப்பிடிப்பிற்கு கிளம்புவாராம் ரமேஷ் கண்ணா. அந்த சமயத்தில் சூர்யா ரமேஷ் கண்ணாவிடம் வந்து ஜோதிகாவை கேட்டதாக சொல்லுங்கள் என்பாராம்.

ரமேஷ் கண்ணாவும் ஜோதிகாவிடம் சூர்யா உங்களை விசாரித்தார் என்று சொல்ல பதிலுக்கு ஜோதிகாவும் சூர்யாவை கேட்டதாக சொல்லுங்கள் என்பாராம். இவ்வாறு இருவரின் காதலுக்கும் தான் தூது சென்றதாக ரமேஷ் கண்ணா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.