இளம்பெண்ணின் தோலை உரித்து ஆடை தயாரித்த கொடூரன்: முடிவுக்கு வராத ஒரு மிக நீண்ட வழக்கு


போலந்து நாட்டில் ஒரு கல்லூரி மாணவி திடீரென மர்மமான முறையில் மாயமானார்.

Katarzyna Zowanda (32) என்னும் அந்த இளம்பெண் மாயமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், போலந்திலுள்ள நதி ஒன்றில் ஒரு படகு பழுதாகி நின்றுபோனது.

படகு ஏன் நின்றது என ஆராயும்போது, அந்தப் படகின் புரொப்பல்லரில் ஏதோ சிக்கியிருப்பது தெரியவந்தது. அது என்ன என கவனமாக ஆராயும்போது, அது ரப்பராக இருக்கலாம் என படகிலிருந்தவர்கள் நினைக்க, அப்போதுதான் அதன் கூடவே மனிதக் காது ஒன்றும் இருப்பது தெரியவர, ஒரு அது மனிதத்தோல் என தெரியவந்ததும் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.

தடயவியல் நிபுணர்களின் ஆய்வில், அந்தத் தோல் காணாமல் போன Zowandaவினுடைய தோல் என தெரியவந்தது. கூடவே, அந்தத் தோல், ஒரு உடை தயாரிப்பதற்காக Zowandaவினுடைய உடலிலிருந்து கவனமாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியவரவே, பொலிசார் அதிர்ச்சியடைந்தார்கள்.

கூடவே நிபுணர்கள் குழு, Zowanda பலமாக அடித்து உதைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைத் தாக்கியவர் ஒரு மார்ஷியல் ஆர்ட் கலைஞராக இருக்கலாம் என்றும் தெரிவித்தது.

Zowanda உயிருடன் இருக்கும்போதே அவரது உடலிலிருந்து தோல் உரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் நிபுணர்கள், அதனால் இரத்தம் வீணாகி அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆக, கத்திக்குத்துக் காயங்கள், கீறல்கள் என Zowandaவின் உடலில் காணப்பட்ட காயங்கள், அவர் சித்திரவதை செய்யப்பட்டதையும், அவர் இறந்த பின் அவரைக் கொன்ற கொடூரக் கொலைகாரன் அவரது உடலுடன் உறவு கொண்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் நடந்தது 1998ஆம் ஆண்டு. ஆனால், பல ஆண்டுகளாக குற்றவாளி சிக்கவேயில்லை.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகப் பட்டியலில் இருந்த Robert Janczewski என்பவரது நண்பர் ஒருவர் பொலிசாருக்கு ஒரு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்ப, Robert வீட்டை சோதனையிட்ட பொலிசார், அங்கிருந்த ஒரு கண்ணாடியில் இரத்தத்துளிகள் இருப்பதைக் கண்டார்கள். அது Zowandaவின் இரத்தம் என உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் Robert ஒரு மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்பதும், அவர் பெண்களை துன்புறுத்திய பின்னணி கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

அத்துடன், அவர் விலங்குகளின் உடல் பாகங்களை வெட்டும் உயிரியல் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றியபோது அங்கிருந்த விலங்குகள் மாயமானதும், அதைத் தொடர்ந்து Robert பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், தனக்கு Zowandaவைத் தெரியாது என்று Robert கூறியுள்ள நிலையில், பல முறை Zowandaவின் கல்லறைக்கு அவர் சென்றுள்ளார்.

அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னமும் தான் நிரபராதி என்றே கூறிவருகிறார். வழக்கு தொடர்கிறது.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.