சக்ராலயா மோட்டார்ஸ் ஷோரூம் புதுச்சேரியில் முதல்வர் திறப்பு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சக்ராலயா மோட்டார்சின், புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நெய்வேலி மற்றும் காரைக்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சக்ராலயா மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான முருங்கப்பாக்கத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சக்ராலயா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் தலைமை தாங்கினர். பொதுமேலாளர் ரிஷிடாண்டன், ஏரியா விற்பனை மேலாளர்கள் துபைல், ஷேக், ஏரியா மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் ரங்கசாமி, புதிய ஷோரூமை திறந்து வைத்து, புதிய வகை எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தினார். புதிய எலக்ட்ரிக் வாகன விற்பனையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா துவக்கி வைத்தார். டாடா மோட்டார்ஸ் மின் வாகன பிரிவு துணைத் தலைவர் சுஷானத்நாயக், சீனியர் பொது மேலாளர் ரமேஷ் துரைராஜன், மின் வாகன பொது மேலாளர் சந்தீப் ஜெயின், துணை பொது மேலாளர் சதீஷ், ஜெயராமன், மண்டல மேலாளர் கோபு, பொது மேலாளர் வேணுகோபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் குமார், ஆறுமுகம், ரமேஷ், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்தவர்களை சக்ராலயா மோட்டாஸ் வெர்ட்டிகல் ஹெட் கோவிந்தராஜூலு, சாகித், பொதுமேலாளர்கள் ரவிக்குமார், ரவிச்சந்திரன், சர்வீஸ் பொது மேலாளர்கள் செல்வம், கார்த்திக், விற்பனை மேலாளர்கள் இளையபெருமாள், சோழன், சந்தோஷ், அக்கவுண்ட்ஸ் மேலாளர் சதீஷ் மற்றும் ஊழியர்கள் வரவேற்று நன்றி கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.