வாழ்க்கையில எல்லா அக்காவுக்குமே தம்பிதான் முதல் குழந்தை.. கண்கலங்க வைக்கும் நிஷா தம்பி செண்டிமேண்ட்!

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் நிஷா’ சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். இப்போது நிஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நிஷா தனது கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நிஷா பேசுகையில்’ என்னடா கருப்பு ரோஜா இன்னைக்கு கலர் கோழிக்குஞ்சு மாதிரி ரெடி ஆயிட்டு இருக்கேனு நினைச்சிராதீங்க. இன்னைக்கு விஜய் டிவியில உடன்பிறப்பு’னு ஸ்பெஷல் ஷோ ஒன்னு நடக்குது. அதுக்காக என் தம்பி நேத்து கிளம்பி வந்துருக்கான். முதல் தடவையா என் தம்பி டிவியில வரான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவனுக்காக ஒரு சர்பிரைஸ் கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன். கண்டிப்பா அது உங்களுக்கு பிடிக்கும். அது ஒரு எமோஷனலான கிஃப்ட். விலை ரொம்ப காஸ்ட்லிலாம் கிடையாது. ரொம்ப கம்மி விலைதான். நான் ரொம்ப பார்த்து பார்த்து அதை ரெடி பண்ணேன்.

என் தம்பி வந்ததுல இருந்து டார்ச்சர் பண்றான். ஆனா அவன் வந்ததே எனக்கு ஹேப்பி. இன்னைக்கு முழுக்க அவனோட தான் இருக்க போறேன். நாளைக்கு ஊருக்கு கிளம்பிருவான்.

பிறகு விஜய் டிவி ஷூட்டிங் ஸ்பாட்க்கு போனதும், பிரணிகா தக்ஷூ, அவரது தங்கையை பார்த்து பேசிய நிஷா அடுத்து, மேக்கப் ரூம்க்கு  போக அங்கு மைனா மேக்கப் போட்டு ரெடி ஆக, அங்கு மைனா தம்பி பாலுவும் இருக்கிறார்.

அங்கிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில்’ மைனா தம்பி பாலு, நிஷா, ஹேமா ராஜ்குமார், பிரணிகா தக்‌ஷூ, ராமர் என ஸ்பாட்டே அலப்பறையாக இருக்கிறது. பிறகு மேடையில் தனது தம்பியுடன், நிஷா தனது தம்பிக்கு மணப்பெண் பார்த்த கதையை பற்றி பேசினார்.

என் தம்பி சவுதி அரேபியால இருந்தான். அப்போ அம்மா பொண்ண பிடிச்சிருக்கா கேட்க சொன்னாங்க. ஆனா நான் அதெல்லாம் எதுக்கு நம்ம தம்பிதானு நினைச்சிட்டு அவன்கிட்ட கேட்காமலே பிடிச்சிருக்குமானு சொல்லிட்டேன்.

அதுக்கப்புறம் என் அம்மா, என்னோட தம்பிக்கு கால் பண்ணி அக்கா பாத்துருக்காப்பா; உனக்கு போட்டோ பிடிச்சிருக்கா பாரு கேட்டாங்க.

ஆனா என் தம்பி’ சத்தியமா பொண்ணோட போட்டோவ நிச்சயத்தார்த்தம் வரை பார்க்கல.  நிஷா யார் சொன்னாலும் கட்டுவேன், நிஷா என்ன சொன்னாலும் கேட்பேனு இந்த நிமிஷம் வரை என்னைய நம்பி கல்யாணத்துக்கு வந்தான்.

ஆனா ஒரு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணிக்கிறேன்  சொன்னான். நான் அவசரப்பட்டு வாடானு சொல்லிட்டேன். அவன் சவுதி அரேபியால 60 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருந்தான். கல்யாணத்துக்கு வந்துட்டு கொரோனா’னால இப்போ ஊருலய செட்டில் ஆயிட்டான். ரொம்ப கம்மியா தான் இப்போ சம்பளம் வாங்குறான். அதெல்லாம் பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.  ஆனா நான் நல்லா இருக்கேன். அதனால தான் அவன் குழந்தைய நான் படிக்க வைப்பேன். அவன் குழந்தைய நான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன். என் வாழ்க்கை முழுக்க என் தம்பிய என் குழந்தை மாதிரி நான் பாத்துக்குவேன். எனக்கு எல்லாமே என் தம்பிதான் என கண்கலங்குகிறார் நிஷா.

பிறகு தன் தம்பிக்கு கிஃப்ட் கொடுத்த நிஷா’ நானும், மைனாவும் நிறைய விஷயத்துல ஒரே மாதிரி இருப்போம். ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். எங்க ரெண்டு பேரோட மைண்ட் வாய்சும் ஒரே மாதிரி தான் இருக்கும். எப்படி மைனாவுக்கு அவ தம்பி பாலு ஒரு குழந்தையோ, அதேமாதிரி என் தம்பி எனக்கு குழந்தை.

வந்த உடனே இந்த கிஃப்ட் பாத்து இது என்னனு என் தம்பி கேட்டான். அப்போ நான் இறந்து போனாலும் உங்க ரூம்ல இந்த போட்டோ இருக்கணும்னு சொன்னேனு அந்த போட்டோவை நிஷா திறந்து காட்டுகிறார். இத்துடன் ஷீட்டிங் வீடியோ முடிகிறது.

பிறகு தன் தம்பியுடன் பேசும் நிஷா, வாழ்க்கையில எல்லா அக்காவுக்குமே தம்பிதான் முதல் குழந்தை. அதேமாதிரி எனக்கு என்னோட தம்பிதான் முதல் குழந்தை என அந்த போட்டோவை காட்டுகிறார். இதுதான் நான்’ இது என்னோட தம்பியோட குழந்தை என போட்டோவை காட்டும் நிஷா’ அத்துடன் தன் தம்பிக்காக எழுதிய ஒரு கவிதையும் வாசித்துக் காட்டுகிறார். மேலும் நிஷாவின் தம்பி அவருக்கு கொடுத்த கைச்செயின் கிஃப்டையும் நிஷா வீடியோவில் காட்டி’ என் தம்பி எனக்கு கைச்செயின் கிஃப்ட் கொடுத்திருக்கான். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு என தன் தம்பிக்கு நன்றி சொல்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.