உக்ரைன் செர்னிவ் நகரில் ரஷ்யப் படையினர் நடத்திய வெறியாட்ட காட்சிகள்.!

உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியான Chernihiv ல் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக ஏற்பட்ட கட்டிட சேத மற்றும் அழிவு காட்சிகள் டிரோன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகளாலும், கட்டிட இடிபாடுகளாலும் காட்சி அளிக்கிறது. 3வாரங்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கைகளை குறைக்கப் போவதாக ரஷ்யா அறிவித்து இருந்த நிலையில் இந்த சேதக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஏவுகணை தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் முகப்புகளும், உள்ளூர் மைதானத்தில் விழுந்த ஏவுகணையால் ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருப்பதும் டிரோன் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 90ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்நகரானது ரஷ்யப் போருக்குப் பிறகு கடும் பேரழிவை சந்தித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.