எஸ்எஸ் ராஜமவுலியுடன் துபாய் புறப்பட்ட சூப்பர் ஸ்டார்… அதுக்காத்தானாம்!

இந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர்
எஸ்எஸ் ராஜமவுலி
. ஸ்டுடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜமவுலி. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களையும் வளரும் இளம் நடிகர்களையும் வைத்து ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

மகதீரா, நான் ஈ, ஆகிய படங்களின் மூலம் கவனத்தை பெற்ற ராஜமவுலி, பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் உலக பிரபலமானார். பாகுபலி சீரிஸ் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியதை பார்த்து பாலிவுட் நடிகர்களே மிரண்டு போயினர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி, தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான வேலையில் இறங்ககியுள்ளார்.

அதாவது தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்திற்காக
துபாய்
சென்றுள்ளார் இயக்குநர் ராஜமவுலி. அவருடன் நடிகர் மகேஷ் பாபுவும் துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எஸ்எஸ் ராஜ மவுலி தனது அடுத்தப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவை இயக்கவுள்ளதாகவும் இந்த கதை டிஸ்கஷனுக்காகதான் இருவரும் துபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கணவருக்கு வந்த ‘அந்த’ ஆசை… மாஜி மச்சானால் கடிவாளம் போடும் சவுந்தர்யா!

ஏற்கனவே இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி, மகேஷ் பாபுவுக்காக இரண்டு கதைகளை வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இருவரும் துபாய் சென்றிருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை உதயநிதி பேச்சு; பாராட்டிய லிங்குசாமி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.