கர்நாடகாவில் 19 புதிய இ.எஸ்.ஐ.,| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடகாவில் மங்களூரு உட்பட 19 இடங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்படும்,” என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 19 புதிய இ.எஸ்.ஐ., புதிய மருத்துவமனை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், தட்சிண கன்னடாவின் பன்ட்வாள், உஜிரே, கஞ்ஜிமட், உடுப்பியின் படுபித்ரேயில் தயாராக உள்ள புதிய இ.எஸ்.ஐ.,மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது.இது தவிர சிஞ்சோளி, அரசிகரே, கோலார், நரசிபுரா, சண்டூர், கனகபுரா, சவுபாத், யாத்கிர், ஹத்தரகி, ராணிபென்னுார், முதோள், கவுரிபிதனுார், வசந்தநரசாபுரா, சிர்சி, கும்டா ஆகிய இடங்களில் புதிய இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது.ஹுப்பள்ளி, தாவணகரேயில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரித கதியில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.