பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம்.. கைகளில் பதாகைகள் ஏந்தி பிரதமர் வீட்டை முற்றுகையிட்டனர்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் விதமாக போலீஸார் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதேபோல,மாணவர்களை பிரதமர் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களை தள்ளி விட்டு மாணவர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

மாணவர்களில் சிலர் “கோ ஹோம் கோடா” என்ற பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். இதுகுறித்து இலங்கை போலீஸார் கூறும் போது, “ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்த வளாகத்தில் இல்லை என்று தெரிவித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.