மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரியில் இ.பி.யு.எஸ் பரிசோதனை வசதி அறிமுகம்

புதுச்சேரி : மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் ‘இ.பி.யு.எஸ்’ எனும் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இவ்வசதி, மாநிலத்திலேயே முதல் முறையாக இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையானது, நாட்டின் சில மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே அமைந்துள்ளது. இப்பரிசோதனையின் மூலம் நுரையீரல் உள்ளே உள்ள திசுவினை பரிசோதித்து நோயின் தன்மையை கண்டறிய இயலும். இப்பரிசோதனை துவக்க நிகழ்ச்சி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, நுரையீரல் சிறப்பு பிரிவு தலைவர் யுவராஜன், நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹரி கிஷான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.