அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் குத்தாட்டம்…விளக்கம் கேட்டு தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்!

திருவாரூர் மாவட்டம் சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் அட்டகாசம் செய்வது தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது சூரனூர் அரசுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்குள் நடனமாடி அதனை செல்போனில் படம்பிடித்து சமூக வளைத்தலங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனையறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தலைமையாசிரியரின் விளக்கத்திற்கு பின்பு மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.