ஈரோட்டில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீர் தீ.!

ஈரோட்டில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

மூலப் பாளையத்தை சேர்ந்த சையத் முஸ்தபா, வழக்கமான பணிகளை முடித்து வீட்டு அவரது TVS Wego இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் திடீரென புகை வருவதை அறிந்த சையத், பைக்கை சாலையோரத்தில் நிறுத்திய நிலையில் புகை அதிகரித்து இருசக்கரவாகனம் முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியாத சூழலில் , தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகி நாசமானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.