எல்.ஐ.சி பங்கு விற்பனை மே 4- 9 வரை நடைபெறும் என்று தகவல்.!

எல்.ஐ.சியின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் மே 9 ஆம் தேதி மூடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முதலில் 5 சதவீதப் பங்குகளை விற்கப்போவதாக அறிவித்த மத்திய அரசு பின்னர் அதனை 3 புள்ளி 5 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இதன் சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் கிடைத்த தொகையை விட இதுவே மிகவும் அதிகமானதாகும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.