சீனர்கள் உட்பட 4 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெஷாவர்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல்கலையில், நடந்த குண்டுவெடிப்பில், சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல்கலையில், செயல்படும் உள்ளூர் மக்களுக்கு சீன மொழியை கற்று கொடுக்கும் மையம் அருகே நின்று கொண்டிருந்த வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. அதில், 2 சீன பெண்கள் , வேன் டிரைவர் மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தனர். இரண்டு சீன பெண்களை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

latest tamil news

மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.