விதவை பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய தமிழ் திரைப்பட நடிகர் கைது! அதிர்ச்சி தகவல்கள்


தமிழ் திரைப்பட நடிகர் வாராகியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் சுஜிதா(31). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் 4 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறேன்.

எனது கணவர் இறந்தபோது, நடிகரும், தயாரிப்பாளரான வாராகி சில உதவிகளை செய்தார். மேலும், அவர் நடத்தும் அலுவலகத்தில் 2016 முதல் 2017 வரை பணியாற்றினேன். அப்போதே, வாராகி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்ததால் நான் வேலையில் இருந்து நின்றேன்.

வாராகிக்கு முதல் மனைவி நீலிமா மற்றும் 2வது மனைவி ஆஷா ஆகியோர் இருக்கும் நிலையில் 3வதாக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேரிலும், தொலைபேசியிலும் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு: புகைப்படம்

திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
நேற்று முன்தினம் திடீரென என் வீட்டிற்குள் நுழைந்த வாராகி என்னை அசிங்கமாக திட்டியதுடன், மடிக்கணினியை அடித்து உடைத்து மிரட்டல் விடுத்தார்.

இதனால் வாராகியிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

சுஜிதா அளித்த புகாரின்படி பொலிசார் விசாரித்த போது வாராகி மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
மேலும், வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வாராகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.