மே மாதத்தில் 3 நாடுகளுக்கு பயணம் செல்லும் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வரும் மே 2, 3, 4ம் தேதிகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை அரசு முறைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பயணத்தின்போது டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் நார்டிக் அமைப்பின் உறுப்பு நாடுகளான நார்வே, ஐஸ்லாண்ட், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய 5 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

latest tamil news

ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸை நேரில் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தோ – ஜெர்மன் ஐ.ஜி.சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். மேலும், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்தும் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.