அணு ஆயுத திறனை வலுப்படுத்த கிம் ஜோங் உன் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பையாங்யாங், வடகொரியாவின் அணு ஆயுத திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் மேலும் மேலும் அந்த நாடு அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.

latest tamil news

இந்த நிலையில் வடகொரியாவின் 90-வது ராணுவம் நிறுவன தினத்தையொட்டி தலைநகர் பையாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இப்பேரணியின் போது ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிம் ஜோங் உன் பேசியது, நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால் நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நீவீன ஏவுகணைகள் உள்பட ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் ஏராளமான ஆயுதங்கள் பேரணியில் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.