ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை: மேலும் நால்வர் கைது| Dinamalar

பாலக்காடு : ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மேலாமுறி பள்ளிப்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரான இவரை, ஏப்., 16ம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், சம்பவத்தில் நேரடித் தொடர்புள்ள அப்துல் ரஹ்மான் உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நேற்று சங்குவாரத்தோட்டை சேர்ந்த அப்துல் ரஹ்மான், பிரோஸ், ரஷீல், பாசித் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.