தமிழகத்தில் தேர்திருவிழாவின் போது சோகம்: மின்சாரம் பாய்ந்து பலர் மரணம்



தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.

தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் வந்தபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 நாள் நடைபெறும் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்நாளிலே இந்த பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.